தண்ட நாயகன் சிங்கணன்

தண்டநாயக்கன் சிங்கணண் இவன் போசள நாட்டைச் சேர்ந்தவன்.போசளப்படையின் தளபதியும் இவன் தான்.மதுரையில் சுந்தரபாண்டியன் ஆட்சி செய்த பொழுது சேர அரசன் பாண்டியன் மகளை களவாடினான் இக்களவு கொட்டுந்தளம் என்னும் கோட்டையில் நடந்தது.அவ் இளவரசியை களவாடிக்கொடுத்தது சிங்கணன் தான்.பின் பாண்டிய இளவரசன் வீரபாண்டியன் இவனை கைது செய்து இவனை உயிரோடு விட்டான்.பின் பாண்டியர் படை கோட்டாற்றுக்கரை கோட்டையை கைப்பற்றிய போது மீள கோட்டையை கைப்பற்ற சேரமன்னன் இவன் தலமையில் பதினையாயிரம் படையை அனுப்பினான்.ஆனால் மூவாயிரம் பேரைக்கொண்ட வீரபாண்டியன் தலமையிலான படை இவர்களை தோற்கடித்தது.இறுதியில் வீரபாண்டியனையும் பாண்டியப்படையையும் ஆயுதம் இல்லாம் இருக்கும் போது கொல்ல சூழ்ச்சி செய்து வீரபாண்டியனால் கைது செய்யப்பட்டு மீண்டும் உயிர்பிச்சை அளிக்கப்பட்டான்.இதனால் மனம் உடைந்து தன் சொந்த நாடான போசளத்துக்கே திரும்பினான். பின் கண்ணூரில் நடந்த போரிலே சுந்தர பாண்டியனால் கொல்லப்பட்டான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்ட_நாயகன்_சிங்கணன்&oldid=1047137" இலிருந்து மீள்விக்கப்பட்டது