தமிழர் நீர்பாசனத் தொழில்நுட்பம்

தமிழர் நீர்பாசனத் தொழினுட்பம் என்பது பண்டைக் காலத்தில் இருந்து இன்றுவரை தமிழர்கள் பயன்படுத்தி வரும் நீர்பாசனத் தொழில்நுட்பங்களைக் குறிக்கிறது. தமிழ்ச் சமூகம் பெரும்பாலும் ஒரு வேளாண் சமூகமாகவே இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக வறட்சிக் காலத்தில் பயிர்ச்செய்கைக்கு தேவையான நீரைப் பெறுவதற்கான பல்வேறு தொழில்நுட்பங்களை அது விருத்தி செய்தது. இத் தொழினுட்பம் பல்வேறு பொருளாதார அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தியது.

கட்டுமானங்கள் தொகு

  • அணை
  • கால்வாய்
  • குளம்
  • செய்குளம்
  • ஏரி
  • கிணறு

வரலாறு தொகு

  • கிமு 1: காவிரி ஆற்றின் குறிக்கே கட்டப்பட்ட கல்லணை - (சோழ அரசன் கரிகாலன்)
  • கிபி 7: மகேந்திரா குளம், செங்கற்பட்டு மாவட்ட குளங்கள்
  • கிபி 8: காஞ்சிபுர ஏரி
  • கிபி 9: வடர்காடு, சேலம் மாவட்ட செய்குளங்கள் (பல்லவர்: நந்திவர்மன்)
  • கிபி 10: கால்வாய்கள், குளங்கள் (சோழர்: முதலாம் பராந்தகன், இராசராசன்)
  • கிபி 13: முசிறி ஏரி - (சோழர்: மூன்றாம் இராசராசன்)

ஆய்வுகள் தொகு

பழ. கோமதிநாயகம் அவர்கள் தமிழர் நீர்பாசனத் தொழினுட்பம் பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். இவர் எழுதிய தமிழர் பாசன வரலாறு என்ற நூல் இத் துறையில் முக்கியம் பெறுகிறது.