தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு அரசு மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையம் என்பது தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் சட்டப்படியும், நேர்மையாகவும் நடத்தப்படுவதற்கான பணிகளைச் செயல்படுத்தும். இதன் ஆணையராக ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி எம்.ஆர்.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.