தாமரை பூத்த தடாகம் (நூல்)

தாமரை பூத்த தடாகம் என்பது ஒரு தமிழ் காட்டுயிர்கள் பற்றிய கட்டுரை நூல். இதன் ஆசிரியர் சு. தியடோர் பாசுக்கரன். இந்நூலில் இந்தியச் சூழலில் வாழும் விலங்குகளைப் பற்றியும் அவை வாழும் இடங்கள் பற்றியும் இயற்கையியலில் குறிப்பிடத்தக்க ஆளுமைகள் பற்றியும் மொத்தம் 26 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூல் ஆசிரியரின் சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகளின் இரண்டாவது தொகுதி ஆகும். இதனை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரை_பூத்த_தடாகம்_(நூல்)&oldid=1433917" இலிருந்து மீள்விக்கப்பட்டது