தியோகா (Deoha) என்பது இராமகங்கா ஆற்றின் துணை ஆறாகும். இது சிவாலிக் மலைகளில் உருவாகிஉத்தராகண்டம் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பாய்கிறது. இது உத்தராகண்டம் மாநிலத்தின் குமாவுன் பகுதியில் நந்தா அல்லது நந்தௌர் என்ற பெயர்களால் அறியப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் சமவெளியில் நுழைந்தவுடன், இந்த ஆறு தியோகா எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. மேலும் கீழ்ப்பகுதிகளில், இது கர்ரா என்றும் அழைக்கப்படுகிறது.

தியோகா
Deoha
நந்தா
காரா
பிலிபித் பகுதியில் தியோகா
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம்
நகரம்நானாக்மாட்டா, பிலிபித், ஷாஜகான்பூர்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்இராமகங்கை
 ⁃ ஆள்கூறுகள்
27°08′26″N 79°56′45″E / 27.1405°N 79.9459°E / 27.1405; 79.9459

சீக்கியர்களின் புனித நகரமான நானக்மாட்டா தியோகாவின் கரையில் அமைந்துள்ளது, இங்குதான் ஆற்றின் மீது நானக் சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. பிலிபித், பிசல்பூர், ஷாஜகான்பூர் மற்றும் சாண்டி ஆகியவை இதன் கரையில் அமைந்துள்ள மற்ற முக்கிய நகரங்கள் ஆகும்.[1][2]

நானக் சாகர் அணை
நானக் சாகர் ஏரி
காரா ஆறு சாஜன்பூரில்

மேலும் பார்க்கவும் தொகு

  • நந்தௌர் வனவிலங்கு சரணாலயம்

மேற்கோள்கள் தொகு

  1. Atkinson, Edwin Thomas (1879). Statistical, Descriptive and Historical Account of the North-Western Provinces of India: Rohilkhand division part 1 (in ஆங்கிலம்). North-Western Provinces and Oudh Government. பார்க்கப்பட்ட நாள் 19 September 2022.
  2. Hunter, William Wilson (1886). The Imperial Gazetteer of India (in ஆங்கிலம்). Trübner & Company. பார்க்கப்பட்ட நாள் 19 September 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோகா&oldid=3793519" இலிருந்து மீள்விக்கப்பட்டது