திரிபுக் கொள்கை

திரிபுக் கொள்கை (ஆங்கில மொழி: heresy) என்பது நிறுவப்பட்ட நம்பிக்கைகளுக்கு அல்லது முறைமைகளுக்கு முரண்பட்ட வலுவான கோட்பாடு ஆகும். திரிபுக் கொள்கையாளர் என்போர் அத்தகைய கோட்பாடுகளைப் பரப்புவோர் ஆவர்.[1] திரிபுக் கொள்கை என்பது சமயத் துறப்பு மற்றும் தெய்வ நிந்தனை ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது. திரிபுக் கொள்கையாளர் தம் சமயத்தைத் துறந்ததாகவோ அல்லது தாம் இறைவனை நிந்தனை செய்வதாகவோ கொள்வதில்லை.[2][3]

நற்செய்திகள் திரிபுக் கொள்கைகளின் மீது வெற்றிகொள்வது போன்று உருவகமாக செதுக்கப்பட்டுள்ள சிலை. அரசர் கௌஸ்தஃப் வாசா கோயில், ஸ்டாக்ஹோம்

முற்காலத்தில் குறிக்கத்தக்க சமயப் படிப்பினை மீறல்களைக் குறிக்க இப்பதம் பயன்படுத்தப்பட்டாலும் தற்காலத்தில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமயக் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களைக் கூட குறிக்கப்பயன்படுத்தப்படுகிறது.[4]

சில இசுலாமிய, கிறித்தவ மற்றும் யூத கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளில் திரிபுக் கொள்கை மரண தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது, பல நாடுகளில் இன்றும் உள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Heresy | Define Heresy at Dictionary.com". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-15.
  2. "Apostasy | Learn everything there is to know about Apostasy at". Reference.com. Archived from the original on 2013-07-17. பார்க்கப்பட்ட நாள் 2013-04-15.
  3. "Definitions of "blasphemy" at Dictionary.com". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-15.
  4. "Oxford Dictionaries: heresy". Archived from the original on 2015-01-03. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபுக்_கொள்கை&oldid=3812685" இலிருந்து மீள்விக்கப்பட்டது