திருமலைராஜன் ஆறு

திருமலைராயன் ஆறு நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற பகுதிகளில் ஓடும் ஒரு ஆறாகும். இந்த ஆறு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திற்கு 2 கி.மீ தொலைவில் உள்ள ராஜகிரியில் காவேரியின் கிளை ஆறான குடமுருட்டி ஆற்றில் இருந்து பிரிகிறது . 15ஆம் நூற்றாண்டில் விஜய நகர அரசின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்தவர் சாளுவத் திருமலை ராயன். தனது தலைநகரமான திருமலைராயன் பட்டினம் என்ற ஊரில் இம்மன்னர் வெட்டிய ஆறு திருமலைராயன் ஆறு எனப்படுகிறது[1]. திருமலைராயன்பட்டினத்தில் குடமுருட்டி ஆற்றின் இன்னொரு கிளையாறான முடிகொண்டான் ஆறு இதனுடன் சேர்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "சைவம்.ஆர்க்". Archived from the original on 2012-05-08. பார்க்கப்பட்ட நாள் 2012-04-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமலைராஜன்_ஆறு&oldid=3688359" இலிருந்து மீள்விக்கப்பட்டது