திருவிழச்சல்

திருவழிச்சல் என்பது சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் சாலுவன் குப்பம் என்ற கிராமத்தின் முந்தைய காலப் பெயராகும்.

இங்கே தான் பன்னாட்டவை அறிவித்த மர்புச் சின்னங்களின் ஒன்றான "புலிக்குகை "உள்ளது .எப்போதோ வந்த ஓரராழிப் பேரலையால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இக்கோயில், 2004 ஆம் ஆண்டு மீண்டும் ஆழிப் பேரலையால் வெளிவந்தது .

தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழமையான கோயில் பட்டியலிலலிது முதலிடம் பிடித்திருக்கிறது .இது தான் கிறித்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோயில் ஆகும்.கோயிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது

சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி ,ஒரு பெண்ணின் சிலை ,விளக்குகள் ,சிவலிங்கம் ,சோழர்களின் செப்பு காசு போன்ற சங்ககாலத்திய பொருள்கள் இங்கே கிடைத்துள்ளன .இங்கு கிடைக்கப்பெற்ற நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது .

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவிழச்சல்&oldid=3738043" இலிருந்து மீள்விக்கப்பட்டது