திருவுந்தியார் உரை

திருவுந்தியார் என்னும் சித்தாந்த நூலுக்கு நல்லதோர் உரை எழுதப்பட்டுள்ளது.[1] உரை எழுதியவரின் பெயர் தெரியவில்லை.[2] உரை தெளிவாகப் பொருள் உணரும் வகையிலும், ஆங்காங்கே சில இலக்கணக் குறிப்புகளுடனும் அமைந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது.[3]

உரை தரும் தெளிவுகளில் சில தொகு

  • யோகப் பயிற்சியினாலே பிராணவாயுவை உள்ளடக்கித் தன்னுடைய போதத்தை [4] இறைவனிடத்துச் செலுத்துவதே வெற்றி. அல்லாத முயற்சிகள் இழிவு.[5]
  • இரவாகிய ஆணவமும், பகலாகிய மாயையும் இல்லாத இன்ப வெளியாகிய இறைவனிடம் அறிவால் உந்தி, பற.[6]
  • உந்தி பற என்பதற்கு இவர் கூறும் பொருள் விளக்கங்கள். (1) குற்றங்களினின்றும் உந்தி பற.[7] (2) பற என்பது ஒருமை பன்மை மயக்கம்.[8] (3) தீமைகளெல்லாம் பறந்து போம்படி நிற்பீர்.

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  2. மாணிக்கவாசகரின் திருவுந்தியார் என்னும் சைவத் திருமுறைப் பகுதி வேறு.
  3. திருக்களிற்றுப்படியார் என்னும் நூலுக்கு எழுதப்பட்டுள்ள உரையும் இத்துடன் உள்ளது.
  4. அறிவை
  5. பாடல் 22
  6. பாடல் 20
  7. குற்றத்திலிருந்து நீங்குவீராக
  8. மூச்சைப் பறக்க விடு, அறிவைப் பறக்கவிடு என்றால் இரண்டும் ஒருமை. மூச்சையும் அறிவையும் பறக்கவிடு என்றால் பன்மை
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவுந்தியார்_உரை&oldid=1881312" இலிருந்து மீள்விக்கப்பட்டது