திறந்த வாசிப்பகம் (எண்ணிம நூலகம்)

திறந்த வாசிப்பகம் (openreadingroom) என்பது பொதுவில் உள்ள தமிழ் இலக்கியப் படைப்புக்களுக்கான ஒர் இணையக் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதற்கான திட்டம் ஆகும். மதுரைத் திட்டம் பண்டைய இலக்கியங்களுக்கு முக்கியம் கொடுக்க இத் திட்டம் பொதுவில் இருக்கும் அண்மைக்கால படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. துறை வாரியாகவும், எழுத்தாளர்கள் வாரியாகவும் நூல்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் சிங்கப்பூரைச் சார்ந்த ரமேஷ் சக்ரபாணியால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு செயற்பட்டு வருகிறது. சிறுவர் இலக்கியம் இதில் உள்ள ஒரு சிறப்புச் சேகரிப்பு ஆகும்.

வெளி இணைப்புகள் தொகு