திவான் சந்த் சர்மா

இந்திய அரசியல்வாதி

திவான் சந்த் சர்மா (Diwan Chand Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1896 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8 ஆம் தேதியன்று பிரித்தானிய பஞ்சாபின் குச்ராத் மாவட்டம் தௌலத்து நகரத்தில் இவர் பிறந்தார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஓசியர்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு முதலாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திவான் சந்த் சர்மா

திவான் சந்த் சர்மா 2ஆவது மக்களவைக்கும், 3ஆவது மற்றும் 4ஆவது இடங்களிலும் குர்தாசுபூர் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1957-1962, 1962-1967 மற்றும் 1967-1968 ஆண்டுகளில் குர்தாசுபூரில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ரினார். இவருக்குப் பின் பிரபோத் சந்திரா பதவியேற்றார். 1969 ஆம் ஆண்டு திவான் சந்த் சர்மா காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Lok Sabha Members Bioprofile-". பார்க்கப்பட்ட நாள் 18 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவான்_சந்த்_சர்மா&oldid=3801065" இலிருந்து மீள்விக்கப்பட்டது