தீனுல் இஸ்லாம் (சிற்றிதழ்)

தீனுல் இஸ்லாம் இலங்கை கொழும்பிலிருந்து 1957ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • மௌலவி மன்சூர் நூரி.

பொருள் தொகு

'தீனுல் இஸ்லாம்' என்றால் 'இஸ்லாமிய மார்க்கம்' என்று பொருள்படும்

உள்ளடக்கம் தொகு

இவ்விதழ் இசுலாமிய அடிப்படைக் கருத்துகளுக்குரிய விளக்க ஆக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இதில் தொழுகை, சகாத், நோன்பு போன்ற விளக்கக் கட்டுரைகள் பலகோணங்களில் இடம்பெற்றிருந்தன. இசுலாமிய இலக்கிய ஆக்கங்கள் இடைக்கிடையே இடம்பெற்றிருந்தன.

ஆதாரம் தொகு

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்