தூசூர் ஏரி

நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி

தூசூர் ஏரி ( Thusur Lake) என்பது நாமக்கல் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியாகும். இது நாமக்கல்-துறையூர் சாலையில் எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது. சுமார் 600 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த ஏரி.[1] நாமக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. தூசூர் ஏரியின் மூலம் 1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நெல், கரும்பு, கேழ்வரகு போன்ற பயிர்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "தூசூர் ஏரி நிரம்பியது". செயதி. வெப்துனியா. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2017.
  2. "தமிழகம் முகப்பு > செய்திகள் > தமிழகம் மாவட்டம் முழுவதும் வறட்சி : சீமை கருவேல மரங்களால் வறண்ட தூசூர் ஏரி". செய்தி. தினகரன். 18 சனவரி 2017. Archived from the original on 2019-02-19. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூசூர்_ஏரி&oldid=3732598" இலிருந்து மீள்விக்கப்பட்டது