தெமேத்திரியு (விவிலிய நபர்)

தெமேத்திரியு என்னும் பெயருடையவர் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் இருமுறை குறிக்கப்படுகின்றார்:

  • பவுலுக்கு எதிராக கலகம் விளைவித்த அர்த்தமி தெய்வத்தை வழிபட்ட தட்டான் ஆவார்.[1]
  • 3 யோவானில் நற்சான்று பகரப்பட்டவர். 1, 2 மற்றும் 3 யோவான் ஆகிய திருமுகங்களை அதன் பெறுநர்களுக்கு தாங்கிவந்தவராக இருக்கலாம். இக்கடிதங்களின் அனுப்புனர், காயு என்பவரிடம் இவரைக்குறித்து நற்சான்று பகர்ந்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. திருத்தூதர் பணிகள் 19:24-41