தொட்டிப்பால் பகவதி கோவில்

தொட்டிப்பால் பகவதி கோவில் கேரள மாநிலத்திலுள்ள திரிச்சூர் (த்ரிஸ்ஸூர்) மாவட்டத்தில் அமைந்துள்ளது. அது புதுக்காடில் இருந்து இரிஞ்சாலக்குடாவிற்குப் (ഇരിഞ്ഞാലക്കുട) போகும் வழியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில், குருமாலி என்றார் இடத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட 108 தேவி கோவிலகளில் இது ஒன்றாகும். இந்தக் கோவில் தொட்டிப்பால் பகல்பூரம் திருவிழாவிற்கு பெயர் போனதாகும். ஆறாட்டுபுழா சாஸ்தாவின் சகோதரியாக இந்தக் கோவிலின் இறைவி கருதப்படுகிறாள். இந்தக் கோவிலானது திப்பு சுல்தானின் ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்டு பல நூற்றாண்டுகளுக்கு ஆதரவின்றி பராமரிக்கப்படாமல் இருந்துவந்தது. 19 ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தக் கோவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

இறைவி தொட்டிபாலம்மையார் மிகவும் கனிந்த மனம் கொண்டவளாகவும் [2] மற்றும் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு தமது வாழ்க்கையில் ஏற்படும் கஷடப்பாடுகளில் இருந்து மீளவும் மேலும் அவற்றை எதிர்கொண்டு வெற்றி காணவும் மனோபலம் தந்து அருளுவதற்காக பக்தர்கள் இங்கே வந்து அம்மனை வழிபடுகின்றனர்[3].

இந்தக் கோவிலுக்கு அருகாமையில் தொட்டிப்பால் மஹா விஷ்ணு கோவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த மிகவும் அமைதியுடன் காணப்படும் தொட்டிப்பால் கிராமம் அங்கு அமைந்திருக்கும் தொட்டிப்பால் அம்மையார் மற்றும் தேவரான மஹா விஷ்ணுவின் அருளால் இயற்கை வண்ணம் செழிந்ததாகவும், மனதிற்கு ஆறுதலும் சமாதானமும் அளிப்பதாகவும் அமைந்துள்ளது.[4]