தொழிற்கல்வி ஆசிரியர் (தமிழ்நாடு)

தமிழ்நாட்டிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வகுப்புகள் வரை தையல், ஓவியம், விவசாயம், தச்சு, நெசவு போன்ற கைத்தொழில்களைக் கற்றுத் தரும் ஆசிரியர்கள் தொழிற்கல்வி ஆசிரியர் என்று அழைக்கப்படுகின்றனர். சில நடுநிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட கைத்தொழிலில் தொழிற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி பெற்றவர்கள் இந்தப் பணிக்கு நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நிலையில் உள்ளனர்.