தோன்றி (மலை)

தோன்றி மலை அரசன் தாமான்தோன்றிக்கோன். ஆனிரைகள் மேயும் நிலம் கொண்ட ஆறு 'தண்ணான்பொருநை' (தண் ஆன் பொருநை). அதுபோலத் தாவும் மான்கள் தோன்றும் மலை 'தாமான்தோன்றி'. இந்த மலையில் பாய்ந்த அருவி கொட்டுவதில்லை. 'இழும்' என வழிந்தோடியது.[1] இதனைக் கருவூருக்கு அருகிலுள்ள தான்தோன்றி மலை என அறிஞர்கள் கருதுகின்றனர். [2]

அடிக்குறிப்பு தொகு

  1. இழுமென இழிதரும் அருவி
    வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே. புறநானூறு 399

  2. ஔவை சு. துரைசாமிப்பிள்ளை புறநானூறு 399 உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோன்றி_(மலை)&oldid=2565950" இலிருந்து மீள்விக்கப்பட்டது