நங்கூரம் (இதழ்)

நங்கூரம் 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும்.

பணிக்கூற்று தொகு

  • சமூக அறிவியல் ஏடு

நிர்வாக முகவரி தொகு

நங்கூரம், அரசடிவீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

உள்ளடக்கம் தொகு

இவ்விதழ் அறிவியல் கட்டுரைகளையும், தமிழ் இலக்கிய கட்டுரைகளையும், தமிழ் தேசிய கட்டுரைகளையும், சுகாதாரம், நேர்காணல்கள், துணுக்குகள், தகவல் களஞ்சியம் போன்ற பல்வேறு அம்சங்களையும் கொண்டிருந்தது. 12 இதழ் நிறைவில் இவ்விதழ் ஆண்டு மலரை வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்ற கேள்வி பதில் அறிவியல் சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இடைக்கிடையே சில கவிதைகளும், புகைப்படங்களும், வாசகர் கடிதங்களும் சேர்க்கப்பட்டிருந்தன. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நங்கூரம்_(இதழ்)&oldid=1521709" இலிருந்து மீள்விக்கப்பட்டது