நந்தகம்
நந்தகம் என்பது திருமாலுடைய வாளின் பெயராகும். இந்த ஆயுதம் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றாக கருதப்பெறுகிறது.[1] ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இந்த ஆயுதத்தின் அம்சமாகக் கருதப்பெறுகிறார்.[2]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0f/Shivas_Kinder_-_0190.jpg/220px-Shivas_Kinder_-_0190.jpg)
பத்தாந்திருமொழியில் பாடல் 111 ல் நாந்தக மேந்திய நம்பி சரணென்று என்ற வரி வருகிறது. இதற்கு நந்தகம் எனும் வடமொழிச்சொல்லே நாந்தகமாக நீண்டுகிடக்கிறது என ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி தனது உரையில் குறிப்பிடுகிறார். [3]