நந்தீசுரர் பூசா விதி

நந்தீசுரர் பூசா விதி (நந்தீஸ்வரர் பூஜா விதி) என்னும் நூல் நந்தீசுரர் என்னும் சித்தரால் இயற்றப்பட்டது. [1]
இந்த நூலில் மொத்தம் 12 பாடல்கள் மட்டுமே உள்ளன.
இதில் முதல் ஆறு பாடல்கள் ஓம்ஸ்ரீ கங்கு, [2] சங்வங்மங் சரவணாய [3] நம சிவய கிம் ஆம், [4] முதலான மந்திரம் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.
மூச்சை வெளி விடுதலை ரேசகம் என்றும், [5] மூச்சை உள் இழுத்தலைப் பூரகம் என்றும், [6] மூச்சை உள் நிறுத்தலைக் கும்பகம் என்றும், [7] குறிப்பிட்டு ரேசகத்தில் ‘ஆம்’ என்றும், பூரகத்தில் ‘இம்’ என்றும், கும்பகத்தில் ‘உம்’ என்றும் வாய் மூக்குகளில் ஒலி உண்டாக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
சந்திர பூசைக்கு ‘யங் நங்’ என்று மந்திரம் சொல்ல வேண்டும் என்கிறது [8]

பாடல் எடுத்துக்காட்டு தொகு

பாரப்பா சனி பூசை சொல்லக் கேளு

பண்பான வங்கென்றும் சங்கென்றும் தான்

நாரப்பா மேருவிலே குந்திக் கொண்டு

நலமாகத் தோத்தரித்துப் பூசைசெய்நீ

வாரப்பா தூப நைவேத்யத் தோடு

வளமாகத் தோத்தரித்துப் பானம் செய்து

ஆரப்பா வேணவரம் கேட்டுக் கொண்டே

அப்பனே அட்சணத்தில் ஈவார் காணே [9]

மேற்கோள் தொகு

  1. சித்தர் பாடல்கள் பதிப்பாசிரியர் அரு.இராமநாதன் பிரேமா பிரசுரம், 23 ஆற்காடு ரோடு, சென்னை 24 வெளியீடு, இரண்டு பாகம், மொத்தம் 686 பக்கம், ஐந்தாம் பதிப்பு 1986 - பக்கம் 323
  2. பாடல் 1
  3. பாடல் 2
  4. பாடல் 3
  5. பாடல் 7
  6. பாடல் 8
  7. பாடல் 9
  8. பாடல் 11
  9. பாடல் 12
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தீசுரர்_பூசா_விதி&oldid=2736530" இலிருந்து மீள்விக்கப்பட்டது