நவஜீவன் (இதழ்)

நவஜீவன் ஈழத்திலிருந்து வெளியான ஒரு பத்திரிகை ஆகும். மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றம் கருதி உழைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு 1948 இல் கொழும்பிலிருந்து வெளிவந்தது. இப்பத்திரிகை வெளியீட்டுக்கு திரு. சின்னையா, திரு.ரா.மு.நாகலிங்கம் ஆகியோர் முன்னின்று உழைத்தனர். நவஜீவனின் முதல் ஆசிரியராக இருந்தவர் கே.எஸ்.காளிமுத்து.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவஜீவன்_(இதழ்)&oldid=857147" இலிருந்து மீள்விக்கப்பட்டது