நவநீதம் (சிற்றிதழ்)

நவநீதம் சிங்கப்பூரிலிருந்து 1931ம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த ஒரு மாத இதழாக அறியப்படுகின்றது. சிங்கப்பூரில் தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்ட இதழாக இதுவுள்ளது.

ஆசிரியர் தொகு

  • புகாரி.

இவரின் சொந்த ஊர் இந்தியா நாகப்பட்டினமாகும். இவர் 1993ல் காலமாகியுள்ளார். இவர் 'பூமணம்' எனும் கட்டுரைத் தொகுதியையும், 'புதத்தம்பி முதலியார்' எனும் நாடகத்தையும், லெட்சுமி காந்தம், கபீர் காந்தி ஆகிய பெருங்கதைகளையும் எழுதியுள்ளார்.

உள்ளடக்கம் தொகு

நவநீதம் ஒரு இலக்கிய சிற்றிதழாக உள்ளது. இதில் பல்துறை சார்ந்த இலக்கிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவநீதம்_(சிற்றிதழ்)&oldid=733087" இலிருந்து மீள்விக்கப்பட்டது