நாராயணீயம்

நாராயணீயம் என்பது ஒரு ஆன்மீக நூல். இதை மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி எழுதினார். பாகவதத்திலுள்ள 14,000 பாடல்களைச் சுருக்கி 1034 பாடல்களாக எழுதினார். சமசுகிருதத்தில் எழுதப்பட்ட இந்த நூலிற்கு நாராயணீயம் எனவும் பெயரிட்டார். இது 1587-ல் எழுதப்பட்டது. இது அச்சு நூல் வடிவில் 1851 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இரயிம்மன் தம்பி என்பவர் இதை வெளியிட்டார்.

இந் நூலை ஸ்ரீமந்நாராயணீயம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதைக் குருவாயூர் கோயிலிலும் இந்துக்களின் மடங்களிலும் படிக்கின்றனர்.


குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயணீயம்&oldid=3618090" இலிருந்து மீள்விக்கப்பட்டது