நாலுவேதபதி அமரபதீசுவரர் கோயில்

நாலுவேதபதி அமரபதீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் வேதாரண்யம்-நாகப்பட்டினம் சாலையில் கொடிசுத்திப் பாலத்திற்குக் கீழ்ப்பாகத்தில் 1 கிமீ தொலைவில் உள்ளது.[1]

இறைவன், இறைவி தொகு

இங்குள்ள மூலவர் அமரபதீசுவரர் ஆவார். இறைவி ஆனந்தவல்லி.[1]

சிறப்பு தொகு

அமரர் மற்றும் பதி இணைந்து அமராபதி ஆகியுள்ளது. ரிக், யஜுர், சாம, அதர்வணம் எனப்படுகின்ற நான்கு வேதங்களும் பூசித்ததால் சதுர்வேதமங்கலம் என்றும் நாலுவேதபதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்திரன் நான்கு வேதங்களால் பூசித்ததால் மூலவர் அமராபதீசுவரர் என்றழைக்கப்படுகிறார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014