நிகழ் (இதழ்)

நிகழ் கோவையில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த சிற்றிதழ். மார்க்ஸிய ஆராய்ச்சிகளுக்கும் நவீன இலக்கியத்துக்கும் பெரும் பங்களிப்பாற்றியது. ஆரம்பத்தில் கவிஞர் நா. சுகுமாரனால் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பின்னர் மார்க்ஸிய ஆராய்ச்சியாளரும் இலக்கியவிமர்சகருமான கோவை ஞானி மீண்டும் தொடங்கி நடத்தினார். இதில் தமிழின் முக்கியமான சிறுகதைகளும் இலக்கிய ஆராய்ச்சிக்கட்டுரைகளும் வெளிவந்தன

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகழ்_(இதழ்)&oldid=3004342" இலிருந்து மீள்விக்கப்பட்டது