நுரைத்துப் பொங்குதல்

நீரிய கரைசலிலிருது வாயு வெளிவரும் நிகழ்வு

நுரைத்துப் பொங்குதல் (Effervescence) என்பது ஒரு நீரிய கரைசலிலிருந்து நுரைத்த குமிழிகள் மூலமாக ஒரு வாயுவானது வெளிவரும் நிகழ்வு ஆகும்.[1]

கார்பனேற்றப்பட்ட மென்பானத்திலிருந்து கார்பன்  டை ஆக்சைடு வாயுவானது நுரைத்துப் பொங்கி மேல் வருதல்

நுரைத்துப் பொங்குதல் என்ற வார்த்தையானது fervere (கொதிக்க என்ற பொருளுடைய) என்ற இலத்தீன் வார்த்தையுடன் ex என்ற முன்னொட்டு இணைக்கப்பட்டு பெறப்பட்ட வார்த்தையாகிறது. இந்த வார்த்தை நொதித்தல் என்பதற்கான மூல வார்த்தை பெறப்பட்ட அதே முறையில் பெறப்பட்டுள்ளது.

ஐதரோ குளோரிக் அமிலம் மற்றும் கால்சியம் கார்பனேட் (உதாரணமாக, சுண்ணாம்புக்கல், பளிங்குக் கல், வயிற்றமில நீக்கி மாத்திரைகள்) இணைந்து வினைபுரியும் போது அல்லது புதிதாகத் திறக்கப்பட்ட கார்பனேற்றப்பட்ட பானங்களான, மென்பானங்கள், பீர் போன்றவையிலிருந்து நுரைத்தல் அல்லது குமிழிகள் உருவாவதிலிருந்து நுரைத்துப் பொங்குதலைக் காண முடியும்.  அழுத்தப்பட்ட நீரில் காணப்படும் கார்போனிக் அமிலத்திலிருந்து அதில் கரைக்கப்பட்டுள்ள கார்பன் டை ஆக்சைடானது கண்ணுக்குத் தெரிகின்ற காற்றுக் குமிழ்களாக வெளிவருகின்றன.  இதே கார்பன் டை ஆக்சைடு, திரவத்தில் காற்று கரைக்கப்பட்டிருக்கும் போது கண்ணுக்குத் தெரிவதில்லை.

உதாரணங்கள்:

CaCO3 + 2 HCl → CaCl2 + H2O + CO2
H2CO3 → H2O + CO2

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-06-09. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுரைத்துப்_பொங்குதல்&oldid=3560966" இலிருந்து மீள்விக்கப்பட்டது