நேப்பாளகௌள

நேப்பாளகௌள இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3வது மேளமாகிய மாயாமாளவகௌளை இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

நேப்பாளகௌள இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேப்பாளகௌள&oldid=1047595" இலிருந்து மீள்விக்கப்பட்டது