பட்டு நெசவு

பட்டு நெசவு என்பது பட்டு நெசவுத் தொழிலைக் குறிக்கிறது. இது இந்தியாவின் பாரம்பரிய தொழில்களில் ஒன்று.

பட்டு இழை தொகு

பட்டு இழையானது, பட்டுப்பூச்சியின் கக்கூன் நிலையிலிருந்து கிடைக்கிறது. பட்டுப்புழுவானது தன்னைச்சுற்றி கூட்டை உருவாக்கிகொள்ளும் நிலை கக்கூன் நிலையாகும்.

தறி தொகு

பட்டு இழையை தேவையான நிறத்தில் சாயமேற்றி தறியின் மூலம் துணியாக நெய்யப்படுகிறது. கைத்தறி, விசைத்தறி போன்றவைகள் மூலம் துணி நெய்யப்படுகிறது.

தொழில் தொகு

தமிழ் நாட்டில் திருபுவனம்[1], காஞ்சிபுரம், கும்பகோணம், அய்யம்பேட்டை, தஞ்சை, திருவண்ணாமலை, ஆரணி அகிய இடங்களில் பட்டு புடவை உற்பத்தி செய்யப்படுகின்றன. திருபுவனம், காஞ்சிபுரம் பட்டு சிறப்பானதாக கருதப்படுகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டு_நெசவு&oldid=3521999" இலிருந்து மீள்விக்கப்பட்டது