பப்பு கலானி

சுரேஷ் புதர்மால் கலானி என்ற பப்பு கலானி (பிறப்பு:ஏறத்தாழ 1951) [1]மகாராட்டிரம் மாநிலத்தில் தானே மாவட்டத்தில் உள்ள உல்காசு நகர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 1980 கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் இவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.[2]

பப்பு கலானி
பிறப்பு1951
பணிஅரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை
ஜோதி
பிள்ளைகள்3

கலானி மீதுள்ள 19 குற்ற வழக்குகளில் (எட்டு கொலை வழக்குகள்) தற்போது பிணை பெற்றுள்ளார்.[3]1986ல் பப்பு கலானி உல்லாஸ்நகர் நகராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக உல்லாஸ்நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1992-2001 காலத்தில் கொலை வழக்கில் சிறையில் இருந்து கொண்டே இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2004ம் ஆண்டில் இந்தியக் குடியரசுக் கட்சி சார்பால் இவர் உல்லாஸ்நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிரா சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Pappu Kalani was only 35 years old when he was elected president of the Ulhasnagar municipal council in 1986."
  2. Girish Kuber (2007-01-09). "Pappu's Ulhasnagar gambit may backfire". The Economic Times. http://economictimes.indiatimes.com/News/PoliticsNation/Pappus_Ulhasnagar_gambit_may_backfire/articleshow/msid-1102026,curpg-2.cms. பார்த்த நாள்: 2007-05-24. "Suresh "Pappu" Kalani: a man who is seen as the personification of this lawlessness in (Ulhasnagar)" 
  3. Dionne Bunsha (2004-12-17). "The States: Dons in a new role". The Hindu இம் மூலத்தில் இருந்து 10 March 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070310185007/http://www.hinduonnet.com/fline/fl2125/stories/20041217001704400.htm. பார்த்த நாள்: 2007-05-24. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்பு_கலானி&oldid=3934580" இலிருந்து மீள்விக்கப்பட்டது