பயனர்:கண்மணி123/மணல்தொட்டி

                          சஞ்சீவி மலை 
    விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த இராஜபாளையம் என்றால் மாம்பழம், மிளகாய், நாய் மட்டுமே நினைவு வரும் பலருக்கு. அங்கு சஞ்சீவி மலையும் உண்டு. இராமாயணத்தில் அனுமார் சஞ்சீவி மலையை தூக்கிச் சென்றபோது விழுந்த சிறு குன்று சஞ்சீவி மலை என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. அங்கு மலைமேல் முருகன் கோவில், பிள்ளையார் கோவில், அனுமார் கோவில்கள் உள்ளன. கார்த்திகை தீபத்தன்று மலைமேல் ஜோதி ஏற்றுவர். மேலும் இராஜபாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் அருவி நீர் குடிநீராக பயன்பட்டு வருகிறது.