பயனர்:சி.குருநாதசுந்தரம்/மணல்தொட்டி

'மருதமாத்தூர் கையெழுத்து இதழ்' புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் என்ற சிற்றூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கியத்திற்கான ஒரு மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. .இம்மன்றத்தின் நோக்கம் தமிழ் சார்ந்த மொழி வளங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதே ஆகும். இம்மன்றத்தின் சார்பில் மாணாக்கர் கையெழுத்து இதழ், மாதிரி அஞ்சல் நிலையம் போன்ற பல புதிய திட்ட முயல்வுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.இம்மன்றத்தின் சார்பாக மருத மாத்தூர் மாணாக்கர் கையெழுத்து இதழ் மாதமொருமுறை நடத்தப்படுகிறது. இகையெழுத்திதழில் மாணாக்கர் தம் ஆக்கங்களைச் சிறப்பாக எழுதி வருகிறார்கள். இக்கையெழுத்து இதழுக்கு மாணாக்கர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென ஆசிரியர் குழுவொன்றும் மாணாக்கரால் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஆறு மாணாக்கர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் மாணாக்கரிடமிருந்து ஆக்கங்களைப் பெற்று அதை முறைப்படுத்துகிறார்கள். அவ்வாக்கங்களை கதை, கவிதை, கட்டுரை, ஓவியங்கள், பொதுவான செய்திகள் என பிரித்து தகுந்த பக்கங்களில் ஒழுங்குபடுத்துகிறார்கள். இது மாணாக்கரிடையே படைப்பாற்றலை மேம்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது.