பயனர்:வாவி/மணல்தொட்டி
கஜசாஸ்திரம்
இது ஒரு தொகுப்பு நூல். யானைகளைப் பற்றி முழுமையாக கூறும் நூல். தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள் காலத்தில் இந்நூல் தொகுக்கப்பட்டது. யானைகளின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லா நிகழ்வுகளையும் இந்நூல் கூறுகின்றது. பண்டைய காலத்தில் போருக்கு பயன்படுத்தப்பட்ட யானைகளை எவ்வாறு பிடிக்க வேண்டும், பிடித்த பின் என்னென்ன உணவு கொடுக்க வேண்டும் போன்ற எல்லா செய்திகளையும் இந்நூல் தெளிவாக கூறுகின்றது.