பயனர்:H.S.SUGATHA JERALDIN-DIET MDU/மணல்தொட்டி

மனவெழுச்சிகள் தொகு

நம்மைச் சுற்றி பலவேறு சுழ்நிலைகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை எதிர்க்கும் மனநிலையிலும், சிலவற்றோடு இணங்கி போகும் மனநிலையிலும் நாம் உள்ளோம். இவற்றின் காரணமாக மனஉணர்ச்சிகள் வேறுபடுகின்றன. மன உணர்ச்சிகளை அளவோடு வெளியிட வேண்டியது மிகவும் அவசியம் . நம்முடைய எண்ணங்களை கட்டுப்படுத்துவதே, மனவெழுச்சியை கட்டுப்படுத்த உகந்த வழியாகும். ஒருவருக்கு இளம் வயதில் எற்படும் மனவெழுச்சி அதிர்வுகள், ஆளுமை கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைகின்றது. மனவெழுச்சி என்பது மன உணர்ச்சிகள் மேலோங்கி நிற்கும் நனவு நிலையாகும் .அது மகிழுணர்வு நிலையாக இருக்கலாம் அல்லது வெறுப்புணர்ச்சி நிலையாக இருக்கலாம் .அடிப்படையில் அமைந்த மனவெழுச்சிகள் (எ .கா ,சினம் ,அச்சம் ,கவலை ,பொறாமை ) இவை எல்லாரிடத்திலும் காணப்படுவது இயல்பாகும் .ஆனால் அதிக அளவில் காணப்படுவது ,பல்வேறு உடல்,உளநல பிரச்சனைகளை தோற்றுவிக்கும் .

அன்பு அல்லது பாசம் தொகு

அன்பு சுயநலமற்றது ,சிறு வயதில் அன்பு மற்றும் பாசத்துடன் வளர்க்கப்படும் குழந்தை ,வெளியுலகில் சுயகட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறது ,அன்பு மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறதுஒருவன் தன்னுடைய தாயிடம் காட்டும் அன்பும் ,,நண்பனிடம் காட்டும் அன்பும் வெவ்வேறானது .அன்பு பிறர்க்கு பாதுகாப்புணர்வையும் ,நம்பிக்கையுணர்வையும் ,அளிக்கிறது .வார்த்தைகள் மற்றும் செயலின் மூலமாக அன்பினை வெளிப்படுத்த வேண்டும் .உலகில் விலையின்றி கொடுக்கப்படுவதும் ,பெறப்படுவதும் பாராட்டுதல் மற்றும் புன்னகை புரிதல் ஆகும் .இவை அன்பின் வெளிப்பாடு ஆகும் .

பரிவு தொகு

பிறரது உணர்வுகளையும் ,மனவெழுச்சிகளையும் .நம்முடையதாக கொள்ளும் மென்மையான உணர்வையே பரிவு என்கிறோம் .அன்பான மற்றும் பரிவான குடும்ப சூழலில் மற்றும் வகுப்பறை சூழலில் வளரும் குழந்தைக்கு பரிவு தானாகவே ஏற்படுகிறது ,உதாரணமாக பிறர் துன்பத்தைக் கண்டு மனமுருகுதல் ,உதவி செய்தல் ,துயர் துடைத்தல் இவை யாவும் பரிவின் வெளிப்பாடு ஆகும் .எதிரி நண்பன் என பாராமல் உதவி செய்வதற்கு குழந்தைகளை ஊக்கப்படுத்தும் போது ,குழந்தைகளுக்கு தன்னைச் சார்ந்த குடும்பத்தின் மீதும் பரிவு ஏற்படும் .இல்லையேல் சுயநலம் மேலோங்கி பரிவற்றவர்களாக வளர்வர் .

                 கூட்டு வாழ்க்கை ,துயரப்படும் உறவினர் மற்றும் நண்பர்களை சந்தித்தல் மற்றும் ஆறுதல்  கூறுதல் ஆகியவை குழந்தைகளிடம் பரிவை ஏற்படுத்த உதவும் வழிகளாகும் .

மகிழ்ச்சி அல்லது இன்பம் தொகு

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ,அப்போதைய அவருடைய எண்ண ஓட்டங்கள், எந்த மனவெழுச்சியை சேர்ந்தது என்பதை.ஒருவரது முகத்தை வைத்து தெரிந்துகொள்ளலாம் .ஒருவரின் நல்ல எண்ணங்களே அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது .வெற்றி ,பொழுதுபோக்கு ,உடல் தேவைகள் பூர்த்தியடைதல் ,உள்ளத்தின் தேவைகள் பூர்த்தியடைதல் ,இவை ஒருவருக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது .புதிய கருத்துக்களை தெரிந்து கொள்ளும் போதும் அதை பிறருக்கு பயன்படுத்தும் போதும் குழந்தைகள் மகிழ்ச்சி அடைகின்றனர் .

                    திறமையை வெளிப்படுத்தும் போது கிடைக்கின்ற சமூக அங்கீகாரம் குழந்தைகளுக்கு   நம்பிக்கையை ஏற்படுத்தும் ,அந்த நம்பிக்கை மகிழ்ச்சியை கொடுக்கும் .நகைச்சுவை குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது .புதிய கருத்துக்களை தெரிந்து கொள்ளும் போதும் ,அதை பிறருக்கு பயன்படுத்தும் போதும் குழந்தைகள் மகிழ்ச்சி அடைகின்றனர் .
                   தன்னுடைய உணர்வுகளுக்கு பிறர் மதிப்பளிக்கும் போதும்,தாங்கள் சொல்வதை பிறர் கேட்டு பதிலளிக்கும் போதும் ,குழந்தைகள் மகிழ்ச்சி அடைகின்றனர் .

சினம் தொகு

அதிக சினம் ஆபத்தானது ,பிறர் தீங்கிழைக்கும் போதும் .ஏமாற்றும் போதும் அதிகமான சினம் ஏற்படுகிறது .தன்னுடைய மனதில் பிறர் மீது சேமித்து வைக்கப்பட்டுள்ள வெறுப்புணர்ச்சிகள்,அதிகப்படியான சின்னத்திற்கு காரணமாகிறது .சினம் ஏற்படுத்தும் நபரை தன்னுடைய இடத்தில் வைத்து பார்த்தல் சினத்தை ஓரளவு கட்டுப்படுத்தும் வழியாகும் .

 பல நிலைகளில் சினத்தை காண்பிக்கின்றனர் .சிலர் தன்னுடைய அதிகாரத்தை காண்பிக்கும் பொருட்டு போலியான சினத்தை காண்பிப்பர் .தன்னுடைய தாழ்வுமனப்பான்மையை மறைக்கும் பொருட்டு போலியான சினத்தை காண்பிப்போர் உள்ளனர்.உண்மையான காரணங்களுக்காக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சினத்தை காண்பிப்போரும் உண்டு 
         சினம் ஏற்படும்போது  எதிரில் நிற்பவர் எண்ணத்தினை புரிந்துகொள்ள ,மனதினை பழக்கப்படுத்த வேண்டும் .சினம் ஒருவரை தனிமைப்படுத்தும் அளவுக்கு வலிமை வாய்ந்தது .
         தன்னுடைய உரிமையை நிலைநாட்ட சினம் தேவைப்படும் போது , அளவான சினம் நம்மை தற்காக்கும் .

பொறாமை தொகு

பொறாமை என்பது அச்சமும் சினமும் கலந்த ஒரு சிக்கலான மனவெழுச்சி ஆகும் .இது முன்பின் தெரியாதவர்களிடம் பெரும்பாலும் ஏற்படுவதில்லை .தன்னுடைய உணர்வுகள் இன்னொருவரால் சிதைக்கப்படும் போது பொறாமை ஏற்படுகிறது.பொறாமை சினத்தினைப் போன்ற தீமை விழைவிக்கும் மனவெழுச்சி ஆகும் .மனதுக்குள் இருந்து நம்மை வருத்தும் .

                 தன்னைப்பற்றிய  உயர்வான ,மற்றும்  நேர்மறை எண்ணங்களை நினைவு கூருதல் வேண்டும் ,யார் மீது பொறாமை வருகிறதோ  அவரைப்   பற்றிய இயலாமைகளையும்  நினைவில் கொள்ளுதல் வேண்டும்,பொறாமை நீங்கும்  வரை இவற்றை திரும்ப  திரும்ப நினைவு கூருதல் அவசியம் .  ,தன்னைத்தானே பாராட்டுதல் ,தன்னிடம் இரக்கப்படுத்தல் இவை பொறாமையை குறைத்துக்கொள்ள உதவும் வழிகளாகும் .தாழ்வு மனப்பான்மை பொறாமை உருவாக இன்னொரு காரணம் ஆகும்.

அச்சம் அல்லது பயம் தொகு

குழந்தைக்கு ,தன்னுடைய தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்த மனவெழுச்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது .கருவறைக்கு வெளியே கேட்கப்படுகிற அசாதாரண ஒலிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் .குழந்தைகள் சிறு வயதினிலே பெற்றோர்களால் ,பயமுறுத்தப்படுகின்றனர் .சாதாரண தினசரி செயல்களான உணவு உண்ணச்செய்தல் ,வீட்டுப்பாடம் செய்ய வைத்தல் இவற்றிற்காக குழந்தைகள் பயமுறுத்தப்படுகின்றனர் .இவை பிற்காலத்தில் குழந்தையின் மன வளர்ச்சியில் பாதிப்பினை ஏற்படுத்தும் .பெரியவர்களுக்கும் அச்சம் சில நேரங்களில் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தும் .

              சூழ்நிலையை மிகைப்படுத்தாமல் உள்ளவாறு ஏற்றுக்கொள்ளுதல் ,நெருக்கமான அறிவாளிகள் என நினைப்பவர்களிடம் பிரச்சனையை பகிர்ந்து கொண்டு தீர்வு காண முயலுதல் ,இவை அச்சத்தை குறைப்பதற்கான வழிகளாகும் .
                 பெரும்பான்மையான பயங்கள்  கற்பனை பயன்களே ஆகும்.(நாளைய தினத்தைப்  பற்றியவை)நாளைய தினத்தைப் பற்றிய நம்பிக்கையை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும் .நாளைய தினம் இன்றய  தினம் போன்றதே ,எனவே   இன்றய  தினத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்  என்பதை கூற வேண்டும் .


கவலை தொகு

நினைப்பதற்கும் நடப்பதற்கும் இடையே காணப்படும் முரண்பாடுகள் கவலைக்கு அடிப்படை காரணம் ஆகும் . பிரச்சனைக்கு தீர்வு காண்பதே கவலையை தீர்ப்பதற்கான வழியாகும் .கவலைக்கு காரணமானவர்களிடம் சமரசம் செய்து கொள்வதை விட ,நம்முடைய மனதிடம் நாம் சமரசம் செய்து பிரச்சனைக்கான காரணத்தினையும் தீர்வையும் விளக்க வேண்டும் இல்லையேல் தெளிவற்ற மனநிலை எரிச்சல் மற்றும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் .

மேற்கோள்

கற்கும் குழந்தை - ஆசிரியர் பட்டய பயிற்சி பாடநூல் முதலாமாண்டு