பயனர்:Indirakumari.d/அன்னைக்கோர் ஆரம்!

ஆகாய வீதியில் அழகாய்ப் பயணிக்கும் வட்ட நிலவதைச் சுட்டிக் காட்டி ‍‍‍‍‍‍‍‍‍‍_ தான் பெற்ற பிள்ளையின் செப்பு வாய்க்குள் சோற்றுக் கவளத்தை ஊட்டி மகிழும் ‍ தாயின் கரங்கள்!

பிஞ்சு விரல்களைப் பற்றி இழுத்து அஞ்சாதே என ஆதரவு காட்டி அகரமுதல எழுத்துக்களை எல்லாம் அக்கறையுடன் பயிற்றுவிக்கும் ஆசிரியக் கரங்கள்!

முத்து முத்தாய் வியர்வை துளிர்க்க‌ பூமித தாயைத் தொட்டு வணங்கித் தன் சேற்று நிலத்தில் விதைகளைத் தூவிப் பிறர் சோற்றுக்காகக் காத்து நிற்கும் உழவரின் கரங்கள்!

நீயே சகலமுமெனச் சரணடைந்து நினைவை ஒடுக்கி அகந்தை அழித்துத் தன் எதிரே நிற்கும் பக்தனைக் காக்கும் புதிராய் விளங்கும் இறைவன் கரங்கள்!

இந்த வரிசையில் இன்று விக்கிபீடியாவில் வார்த்தைகளை சலித்துக் கோர்த்து கருத்து முத்துக்களை இடை பதித்து அன்னை தமிழுக்கோர் ஆரம் அணிவிக்கும் மகிழ்ச்சியிலே எனது கரங்கள்!