பயனர்:Prabha jonie/மணல்தொட்டி

வீட்டு தோட்டப்பயிர்கள்'இன்றைய கால கட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து வளர்க்காத காய்கறிகள்,பழங்களை பார்ப்பத்தே அபூர்வம்.ஆம், விளைநிலங்கள் அழிப்பு,அதிக விளைச்சலுக்கு ஆசை,விரைவான மகசூலுக்கு ஆசை போன்ற போன்ற மனிதனின் சுயநலத்தால் நாம் இன்று ஐம்பது வயது தாண்டி வாழ்வதே அரிதாகி விட்டது.இத்தகு சூழலில் வீட்டில் எளிதாக வளர்க்கக்கூடிய காய்கறிகள்,பழங்களை விளைவித்து பயமுறுத்தும் நோய்களை விரட்டி வாழ்நாளை நீட்டிக்கலாம்.பிரபஞ்சம் பெரிய பூ; பூ சிறிய பிரபஞ்சம் என்ற கவிக்கோவின் வரிகளை தினமும் சொல்லுகின்றன வீட்டில் வளர்க்கும் தோட்டப்ப்யிர்கள்.செடி கொடிகளிடம் பழகப்பழக வார்த்தைகள் அர்த்தமற்று போகும்.அசைவுகள் மூலம் உண்ர்வுகளை வெளிப்படுத்தும்.தக்காளி,வெண்டைக்காய்,பச்சை மிளகாய்,கத்தரிக்காய்,புடலங்காய்,கீரை வகைகள்,சீத்தாப்பழம் கொய்யா,மாதுளை,கறிவேப்பிலை போன்றவற்றை வீட்டிலே பயிர் செய்யலாம்.

வீட்டிற்கு அழகு சேர்க்கும் முக்கிய இடம் தோட்டம்.விலை உயர்வான உரங்களை வாங்கி இடுவதற்கு பதில் வீட்டு கழிவிலிருந்தே உரம் தயாரிக்கலாம். இயற்கை உரங்கள் மண்ணுக்கும் நல்லது.அக்கம் பக்கத்தாருக்கு கொடுப்பதில் ஏற்படும் மகிழ்ச்சியே அலாதி தான்.ஆர்வம்,முயற்சி இருந்தால் பூச்சி மருந்து இடாத காய்கறிகளை வீட்டிலிருந்தே பெறலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Prabha_jonie/மணல்தொட்டி&oldid=1948736" இலிருந்து மீள்விக்கப்பட்டது