பயனர்:SUGANTHAMALAR/மணல்தொட்டி
நான் என் வாழ்வில் கடைப்பிடிப்பது :
திருக்குறளின் இனிமைகள்:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிலுக்கப் பட்டு
- எதை அடக்கியாளாவிட்டாலும் நாக்கை அடக்கியாள வேண்டும், அவ்வாறு அடக்கியாளவிட்டால் குற்றமான சொல்லை பேசி துன்பப் பட
நேரிடும்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
- விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
திருக்குறளானது நம் வாழ்வை நெறிப்படுத்தும் ஓர் ஆயுதமாகும். திருக்குறளைப் படித்தால் மட்டும் போதாது அதனை வாழும் வாழ்க்கையில் கலந்து அதனின் ருசியைப் பருக வேண்டும். நம் வாழ்க்கையை வெளிச்சமாக்கும் சக்தி இந்த 1330 திருக்குறளுக்கு உண்டு. ஆசையோடு படித்தால் மனதில் பசுமரத்தாணி போல பதியும்.
திருக்குறளைப் படி திறம்பட வாழு