பயனர்:TNSE AGRI CHANDRASEKARAN P NKL/மணல்தொட்டி

          பயிர்களுக்கான பஞ்சகவ்யம்      
  பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து வகையான பொருட்களான பசுஞ்சானம், பசு கோமியம், நெய், பால், தயிர் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் இப்பெயர் பெற்றது.

பஞ்சகவ்யாவின் நன்மைகள்:

   இதுவொரு இயற்கையான பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது. இரசாயன உரத்தைப் போல் காற்று, நிலம், நீரை மாசுபடுத்துவதில்லை. இதில் நுண்ணூட்டங்கள் அதிகம் இருப்பதால் நிலம் சத்து நிரம்பியதாக  மாறுகிறது. பயிர்கள் நல்ல வளர்ச்சி பெற்று சரியான காலத்தில் அதிகமான பூக்கள் உண்டாகி நல்ல மகசூல்  தருகிறது. பூ, பிஞ்சுகளின் உதிர்வு குறைகிறது.காய்கனிகளின் சுவை அதிகமாகிறது.