பயனர்:TNSE ANBU KPM/மணல்தொட்டி

வானசுந்தேஸ்வரர் திருக்கோவில்
மானாம்பதி[1]
ஊராட்சி
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
ஆளுநர் சி.வித்தியாசாகர் ராவ்
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாவி
மாவட்ட ஆட்சியர் பொன்னையா
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி காஞ்சிபுரம்
சட்டமன்றத் தொகுதி உத்திரமேரூர்
மக்கள் தொகை

"மானாம்பதி" மானாம்பதிக்கு வானவன் மாதேவீச்வரம் என்ற சிறப்புப் பெயருண்டு[2]. இப்பெயர் நாளடைவில் மருவி மானாம்பதி என்றாயிற்று.இவ்வூரில் வேட்டிகள் நெய்ப்படுகின்றன.

அமைவிடம் தொகு

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூருக்கு அருகே உத்திரமேரூர் வந்தவாசிப் பாதையில் அமைந்ததுள்ள இந்த ஊர், சுந்தர சோழர் மனைவியும் முதலாம் இராஜஇராஜனின் தாயாருமான வானவன் மாதேவி பெயரால் ஏற்பட்ட இந்த ஊரில், வானவன மாதேவீச்சரம் என்ற திருக்கோயில் இருக்கிறது. இக்கோயில் பல்லவர் காலத்தில் எழுப்பப்பட்டுச் சோழர்களால் மேம்படுத்துப்பட்டது. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள வானசுந்தரேசுவர சாமி இந்தராணிக்குக் காட்சி தந்தார் என்கிறது தல புராணம்.

தொழில் தொகு

இந்த ஊரின் உயிர் மூச்சு நெசவுத் தொழிலாகும். இங்கே நெய்யப்படும் வேட்டிகள் மிகவும் பேர் பெற்றவை. தரம் நிறைந்த இழைகளால், நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டவை. தமிழ அரசின் பரிசுகளைப் பலமுறை பெற்ற பெருமை மானாம்பதி வேட்டிகளுக்கு உண்டு.

காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே பெரிய மாட்டுச் சந்தை கொண்ட ஊர்இவ்வூர். இங்கே கூடும் சந்தையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய ஊரையே கலகலக்க வைப்பார்கள். ஒவ்வொரு வியாழனன்றும் மானாம்பதி சந்தை தவறாமல் நடந்து வருகிறது. இச்சந்தையில் அனைத்து வகையான காய்கறிகள், மளிகைப்பொருட்கள், துணிமணிகள் மற்றும் அன்றாட வாழ்க்கைத் தேவையான அனைத்து பொருட்களையும் இங்கே வாங்கலாம். இவ்வூராட்சிக்கு இச்சந்தையின் மூலம் அதிக வருமானம் வருகிறது.

முக்கிய திருவிழாக்கள் தொகு

==தைப்பூசம்==
தைப்பூசம்

மாசி மகம் தொகு

 
மானாம்பதி மாசி மகம்
மேற்கோள்கள் தொகு
  1. மானாம்பதி ஊராட்சி
  2. உத்திரமேரூர் உலா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_ANBU_KPM/மணல்தொட்டி&oldid=2281563" இலிருந்து மீள்விக்கப்பட்டது