பயனர்:TNSE DEVARAJU ERD/மணல்தொட்டி

தண்ணீர்பந்தல்பாளையம் தொகு

தண்ணீர்பந்தல் பாளையம் என்ற ஊர் ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 17 வது வார்டில் அமைந்துள்ளது. ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவில் சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ளது. இவ்வூரில் மாநகராட்சி நடுந்லைப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. இப்பள்ளியில் சுமார் 145 மாணவர்கள் கற்றல் பணியிலும், 9 ஆசிரிர்கள் கற்பித்தல் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 1 முதல் 5 வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியும் நடைபெற்று வருகிறது. இந்தி மொழியை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள் 12 பேர் பயின்று வருகின்றனர். தன்னார்வலர் ஒருவர் இந்த மாணவர்களுக்கு கல்வி போதித்து வருகிறார். மாநகராட்சி நிதி உதவி மூலம் நான்கு வகுப்பறைக் கட்டிடங்களும் ஆழ்துளைக் கிணறு ஒன்றும் இப்பள்ளில் அமைக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_DEVARAJU_ERD/மணல்தொட்டி&oldid=3484252" இலிருந்து மீள்விக்கப்பட்டது