பயனர்:TNSE JERJE/மணல்தொட்டி

'

                       '"துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை், கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதுதில்லை"

'

    இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.  அதில் ஒரு அணிலுக்கு கடவுள் பக்தி அதிகம்.  எந்த காாியத்தை செய்தாலும் இறை சிந்தனை செய்துவிட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம்.  அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது.  திட்டமிட்டு செயல்புாியும் புத்திசாலிக்கு கடவுளே தேவையில்லை என்று அடிக்கடி சொல்லும்.  அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிறிக்கும்.  
    கடவுள் பக்தி உள்ள அணில் இதையெல்லாம் கண்டுக்கொள்வதே இல்லை.  விளையாட்டு மிகவும் சுவாரசியமாக தொடா்ந்தது.  நேரம் போவதே தொியவில்லை.  ஒரு நாள் மரத்தில் உற்சாகத்துடன் ஓடிக்கொண்டிருந்தபோது புத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டது.  காயம் எதுவும் படவில்லை என்ற போதிலும் கொஞ்சம் வயிற்றில் அடிப்பட்டு வலித்தது. அப்பொழுது அந்த அணில் பொிய ஆபத்திலிருந்து என்னை காப்பாற்றிய கடவுளே, "உங்களுக்கு நன்றி" என்றது.இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிாி சிாி என்று சிாித்தது.  கீழே விழுந்து மண்ணை கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது.  உன் கடவுள் எதற்காக உன்னை கீழே தள்ளிவிட்டாா் என்று கொஞ்சம் அவருக்கிட்டயே கேட்டு சொல்லேன் என்று சொல்லேன் என்று மீண்டும் கிண்டலாய் சிாித்தது.  பக்தியுள்ள அணில் சொன்னது கடவுளை நம்புற நாங்கள் எல்லாம் துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறது இல்லை, கீழே தள்ளப்பட்டும் மடிந்துப்போகிறது இல்லை.  
    அதனால் கடவுள் எங்களை கீழே தள்ளிவிட்டாலும் அதிலும் காரணம் இருக்கும் என்றது.  ஆமாம் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுகிறது இல்லை மீண்டும் விழுந்து விழுந்து சிாிக்கும் தன் நண்பனை பாா்த்தது பக்தியுள்ள அணில்.  கண்களை மூடி விண்ணை நோக்கி கடவுளே இந்த அவமானத்துக்கும் வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தாள் என்னை மன்னித்திடு என்று சொல்லி அது கண்ணை திறக்கும் போது அது கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கிவிட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கி குலுங்கி சிாித்துக் கொண்டிருந்தது.  அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்துகொண்டிருந்தது.  உன் பக்கத்துல பாம்பு என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏற வில்லை.  கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை பாம்பு லபக்கென்று கவ்விக்கொண்டது.  தன் தோழன் மரத்திலிரு்ந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப்பட்டிருந்தது.  
    நமக்கு எது நிகழ்ந்தாலும் இறைவன் அதை நன்மைக்குத்தான் செய்கிறாா் என்பதை உணா்ந்துக்கொண்டால் வேதனைக்கு இடம் ஏது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_JERJE/மணல்தொட்டி&oldid=2332352" இலிருந்து மீள்விக்கப்பட்டது