பயனர்:TNSE SGMK VLR/மணல்தொட்டி

இரு இலைகளின் மகத்துவம்

1.பூனை மீசை இலை

பூனை மீசை என்பது ஒரு செடியின் பெயர். அந்த செடியின் இலை பூனையின் மீசையை போலவே உள்ளதால் அச்செடியின் இலையை பூனை மீசை இலை என்று அழைப்பர். இந்த இலையின் மருத்துவ குணம் சிறப்பு வாய்ந்ததாகும். சிறுநீர் பையில் உள்ள கற்களை கரைத்து வெளிறேற்றும் தன்மைக்கொண்டது.

	மனித உடலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று சிறுநீர் பையில் கற்கள் உண்டாகி சிறுநீர் வெளியேற்ற முடியாமல் கடுமையான வலியை உண்டாக்கும். இதற்கு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்வதை தவிர்த்து விட்டு பூனை மீசை இலைகள் 10 எடுத்து வெறும் வயிற்றில் நன்றாக மென்று தின்று விட்டு 10 நிமிடம் கழித்து 1 லிட்டர் தண்ணீர் குடித்தால் அரை மணி நேரத்தில் சிறுநீர் பையில் உள்ள கற்கள் கரைந்து எந்த விதமான வலியும் இல்லாமல் சிறுநீராக வெளியேறும்.

2. ஆடு தொடா இலை பெரும்பாலான இலைகள் கசப்பு தன்மைக் கொண்டவை. கால்நடைகளில் ஒன்றான ஆடு அவ்வாறான கசப்புத் தன்மைக் கொண்ட இலைகளை விரும்பி உண்ணும் தன்மைக் கொண்டது. ஆனால் ஆடே தொடாத இலை ஒன்று உண்டு. காரணம் அந்தச் செடியின் இலை அந்த அளவுக்கு கசப்புத் தன்மைக் கொண்டவை. அதனால் தான் அதற்கு ஆடு தொடா இலை என்று பெயர் வந்தது. இந்த இலையை பல்வேறு வகையில் பயன்படுத்தினால் பல்வேறு வகையான தீராத நோய்கள் குணப்படுத்தும் தன்மைக் கொண்டது. அவற்றில் ஒரு சில நோய்களைப் போக்கும் மருத்துவ முறைகளைப் பற்றி தெரித்துக் கொள்ளுவோம். சைனஸ்: இந்த பிரச்சனை உள்ளவர்கள் மூன்று ஆடு தொட இலையை எடுத்து ஒரு டம்ளர் அளவு தண்ணீhpல் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீர் கால் டம்ளர் அளவு வந்தவுடன் அதில் இரண்டு மிளகை இடித்து போட்டு நீர் ஆறிய உடன் வெறும் வயிற்றில் 10 நாட்கள் குடித்து வந்தால் தீராத சைனஸ் தொல்லை உங்களை விட்டு விலகும். இந்த பிரச்சனைக்கு இது மட்டுமே நிரந்த தீர்வு

அஜீரணக் கோளாறு: ஆடு தொட இலை சாறு 3 தேக்கரண்டி, இஞ்சி சாறு 3 தேக்கரண்டி, புதினா இலை சாறு 3 தேக்கரண்டி, எலும்மிச்சை சாறு 1 தேக்கரண்டி எடுத்து ஒன்றாக கலந்து அதில் சிறிது ஓமம் சேர்த்து அரை லிட்டர் சூடான தண்ணீhpல் கலந்து சாp சமமாக காலை, மாலை இருவேலை என இரண்டு நாட்கள் குடித்து வந்தால் அஜீரணக் கோளாறு விட்டு விலகும்.

வாயு தொல்லை நீங்க: ஆடு தொட இலைச்சாறு கால் டம்ளர், இஞ்சி சாறு இரண்டு தேக்கரண்டி எடுத்து இரண்டையும் கலந்து அதில் சிறிது மிளகுத்தூள் கலந்து காலை, மாலை என மூன்று நாட்களுக்கு குடித்து வந்தால் தீராத வாயுத்தொல்லை விட்டு விலகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SGMK_VLR/மணல்தொட்டி&oldid=2280013" இலிருந்து மீள்விக்கப்பட்டது