பயனர்:TNSErajendranTNV/மணல்தொட்டி

காரிரத்தினக் கவிராயர்

'''காரிரத்தினக் கவிராயர்''' உரையாசிரியர்களுள் குறிப்பிடத் தக்கவர். இவர் ஒரு வைணவப் புலவராவார்.

பிறப்பு தொகு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள தென்திருப்பேரையில் வேளாண் மரபில் பிறந்தவர். காரிரத்தினம் என்பது நம்மாழ்வாரின் சிறப்புப் பெயர். வைணவராகிய இக் கவிராயர் நம்மாழ்வாரின் பெயரைப் பெற்றார். இவரது காலம் 17-ம் நூற்றாண்டு.

கல்வி தொகு

ஆழ்வார் திருநகரில் இருந்த 'மாறன் அலங்காரம்' முதலான நுல்களை இயற்றிய திருக்குருகைப் பெருமள் கவிராயரிடம் கல்வி பயின்றார்.

எழுதிய நூல்கள் தொகு

மாறன் அலங்காரம் என்ற நூலுக்கு உரையும், திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு விளக்கமாக 'நுண் பொருள் மாலை' என்ற ஒரு நூலும் இயற்றியுள்ளார். 'தொல்காப்பிய நுண் பொருள் மாலை' என்ற உரை விளக்கம் எழுதியதாகக் கூறுவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSErajendranTNV/மணல்தொட்டி&oldid=2310299" இலிருந்து மீள்விக்கப்பட்டது