பயிருக்கு சேதம் விளைவிக்கும் நுண்ணுயிரிகள்

வேளாண்மையில் பயிர்களுக்கு சேதத்தை உண்டாக்குவதில் நுண்ணுயிரிகளுக்கு முதன்மைப் பங்கு உண்டு. அந்த நுண்ணுயிர்களால் உண்டாகும் பாதிப்புகள் கீழ்வருவன.[1]

பூசணம் தொகு

பூசணங்கள் தாவர இனத்தை சார்ந்தவை . நோய் உண்டு பண்ணும் பூசணங்களுக்கு பச்சையம் கிடையாது. அதனால் தாவரங்களில் இவை தாவரங்களில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து நோயை உண்டு பண்ணுகின்றன. இலையில் புள்ளிகள், துளைகள், கருகல், சாம்பல் நிறபடிவம், துருபடிவம், செடிவாடுதல், நாற்றழுகல் மற்றும் வேர் அழுகல் முதலிய அறிகுறிகள் பூசணங்களால் தோன்றுகிறது.

எடுத்துக்காட்டு நோய்கள்
  • நெல் இலைபுள்ளி நோய் (பைரிகுலோரியா ஒரைசே)
  • கம்பு அடிச்சாமல் நோய் (ஸ்கிளிரோஸ்போரா)

பாக்டீரியா தொகு

பாக்டீரியாக்கள் பச்சையம் அடங்கபெறாத, ஒற்றை திசுவறையைக் கொண்டவை. பாக்டீரியாக்கள் இலைபுள்ளிகள், கரிதல், மென்மை அழுகுதல், பிளவை, வாடல் மற்றும் கழலைகள் கொப்பளங்கள் போன்ற நோய் அறிகுறிகளை தோற்றுவிக்கின்றன.

எடுத்துக்காட்டு நோய்கள்
  • நெல் பாக்டீரியா இலைகருக்கல் - சேந்தோமோனாஸ் ஒரைசே.
  • எலுமிச்சை பிளவை - சேந்தோமோனாஸ்சிட்ரை
  • பருத்தி -கருங்கிளை நோய் - சேந்தோமோனாஸ் மால்வேசியாரம்.

மைக்கோபிளாஸ்மா தொகு

மைக்கோபிளாஸ்மா (Mycoplasma) என்பது தனி வகை நுண்ணுயிர் கூட்டத்தை சேர்ந்தது . பாக்டீரியாவின் அமைப்பையும் வைரஸின் தன்மையும் கொண்டது. பூச்சிகள் மைக்கோபிளாஸ்மாவைப் பரப்பி பயிர் நோய்கள் தோன்றக் காரணமாகின்றன. மைக்கோபிளாஸ்மாவால் பயிர்களின் வளர்ச்சி குன்றுதல், புல்தண்டு, சிற்றலை மற்றும் பச்சை பூ ஆகிய நோய்களைத் தோற்றுவிக்கின்றன.

மைக்கோபிளாஸ்மாவால் ஏற்படும் நோய்களுக்கு எடுத்துக்காட்டு
  • எள் பச்சை நோய், கத்திரி சிற்றிலை நோய்.

வைரஸ் தொகு

வைரசுகள் (Virus) உருவத்தில் மிகச் சிறியவை. எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும். இதில் உட்கரு அமிலமும் அதை சுற்றி புரத உறை மட்டுமே காணப்படும். வைரஸ்கள் பூச்சிகளால் பயிர்களுக்குப் பரப்பப்பட்டு நோய் உண்டுபண்ணுகின்றன. வைரஸ் பயிர்களில் தேமல், இலைசுருள், இலைச் சுருக்கம், இலைநெளிவு, இலைவடிவ மாற்றம், வளரச்சி குன்றுதல் மற்றும் மலட்டு தன்மை ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன.

எடுத்துக்காட்டு நோய்கள்
  • வெண்டை நரம்பு வெளுத்தல்
  • துவரை தேமல் நோய்.

பாசிகள் தொகு

பாசிகள் தாவர இனத்தை சார்ந்தவை . ஆனால் நோய் உண்டு பண்ணும் பாசிகளுக்கு பச்சையம் கிடையாது.

பூக்கும் தாவர ஒட்டுண்ணிகள் தொகு

சில பூக்கும் தாவர ஒட்டுண்ணிகள் தாவரங்களின் வேர்களில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்றன. இதற்கு வேர்ப்புல்லுருவி என்று பெயர் .

எடுத்துக்காட்டு
  • சுடு மல்லி

நூற்புழுக்கள் தொகு

நூற்புழுக்கள் கண்ணுக்கு தெரியாத நூல் போன்ற தோற்றத்தை கொண்டவை. இவை மண்ணுக்கு அடியில் வாழ்ந்து தாவரங்களை தாக்கிச் சேதம் விளைவிக்கின்றன.

எடுத்துக்காட்டு நோய்கள்
  • உருளை கிழங்கு பொன்னிற நூற்புழு

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். தொழிற்கல்வி மேல்நிலை முதலாம் ஆண்டு ப.எண்.170