பரம ராசிய மாலை

பரம ராசிய மாலை [1] என்பது குரு நமசிவாயர் இயற்றிய நூல்களில் ஒன்று. நூலின் காலம் அதன் ஆசிரியர் வாழ்ந்த 16 ஆம் நூற்றாண்டு. தில்லை நடராசப் பெருமானை இவர் பரமராசியன் என்று குறிப்பிடுகிறார். [2] இந்த நூலில் காப்புப்பாடல் ஒன்று மற்றும் 100 பாடல்கள் உள்ளன.

எடுத்துக்காட்டு [3] தொகு

1

சமயம் மிகு மூ வகையில் சார்ந்தோர்க்கும் சிந்தை
அமைய நெறியோர் தமக்கும் - உமையவள் தன்
பூமானைச் சந்ததமும் பொன் அம்பலத்து ஆடும்
கோமானைக் கொண்டே குலா [4]

2

குகையினில் சோண கிரியினில் உற்றும் குருபரன் ஆகி வீற்றிருந்து
வகை பெறக் கருணையால் எனக்கு அளித்த வண்மையை மறப்பனோ அடியேன்
நகையொடு புரம் மூன்று எரித்த நாயகனே நல்ல சீர் அடியார் தமக்குப்
பகைவரும் உறவர் ஆக்கிடும் பொன் அம்பலவனே பரம ராசியனே. [5]

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 175. 
  2. பரமராசயன் என்பது இக்காலத்தில் பரம-ரகசியம் என்று கூறப்பட்டு விளக்கம் சொல்லப்படும் நிலையில் உள்ளது
  3. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  4. காப்புப்பாடல்
  5. 96 ஆம் பாடல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரம_ராசிய_மாலை&oldid=1484895" இலிருந்து மீள்விக்கப்பட்டது