பாண்டிச்சேரி முற்றுகை (1778)

பாண்டிச்சேரி முற்றுகை (Siege of Pondicherry) என்பது அமெரிக்க விடுதலைப் போரின் போது பிரிட்டன்-பிரான்ஸ் இடையே இந்திய துணைக்கண்டத்தில் 1778ல் நடைபெற்ற ஒரு முற்றுகைப் போராகும். இதில் பிரிட்டிஷ் படைகள், பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருத்த புதுச்சேரியை பத்து வார முற்றுகைக்குப் பின்னர் கைப்பற்றின. இந்த முற்றுகை 21 அகஸ்ட் முதல் 19 அக்டோபர், 1778 வரை நடைபெற்றது.