பாண்டியன் வங்கி

பாண்டியன் வங்கி (Pandyan Bank) தமிழ்நாட்டின் மதுரையில் 1946ஆம் ஆண்டு திசம்பர் 11 அன்று எஸ்.என்.கே.சுந்தரம் அவர்களால் நிறுவப்பட்ட தனியார்த்துறை வங்கியாகும்.[1] இதனை கனரா வங்கி 1963இல் கையகப்படுத்தியது.

பாண்டியன் வங்கி பல புதுமைகளை அறிமுகப்படுத்தியது; சேமிப்பு வங்கி கணக்குப் புத்தகங்களுக்கு நெகிழியாலான பொதிகளை வழங்கியது. 1947ஆம் ஆண்டிலேயே முதன்முதலாக மதுரை டவுன்ஹால் கிளையை அனைத்து மகளிர் கிளையாக உருவாக்கியது. இங்கு பணிபுரிந்த பத்து பெண்களில் நிறுவனர் சுந்தரத்தின் மகளான கமலா சுந்தரமும் ஒருவராவார்.[2]

திசம்பர் 2, 1963இல் கனரா வங்கியுடனான இணைப்பு செயலாக்கத்திற்கு வந்தது. கையகப்படுத்தப்படும்போது பாண்டியன் வங்கிக்கு 800 பணியாளர்களும் 83 கிளைகளும் இருந்தன.[1]

மேற்சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Kamanth (2006), p.112.
  2. The Hindu, "1950s’ banking in George Town", 23 December 2013,[1] – accessed 8 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டியன்_வங்கி&oldid=1907491" இலிருந்து மீள்விக்கப்பட்டது