பாறைக் கோவில்

பாறைக் காேவில் முருகன் ஆலயம் என்பது கூளையூர் மாதையன் நகர் அருகிலுள்ள முருகன் நகர் எனும் பகுதியில் இருக்கின்ற காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஓர் ஆலயமாகும்.இவ்வாலயம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்படாததும்,பரம்பரை பூசாரியினால் நிர்வகிக்கப்படும் ஓர் ஆலயமாகும்.இவ்வாலயம் பாறைகளின் மீது அமைக்கப்பட்டுள்ளதால் பாறைக்காேவில் முருகன் ஆலயம் என அழைக்கப்படுகிறது.இவ்வாலயத்தின் முன் உள்ள பாலியில் தண்ணீர் குடிக்க குரங்குகள்,விலங்குகள்,பறவைகள் பாேன்றன வரும்.இக்காட்டுப்பகுதியில் காட்டுப்பன்றி,மயில்,முயல்,குரங்கு பாே ன்றன உள்ளன.காேவிலுக்குச் செல்லும் வழியில் முன்பிருந்த நிழல்தரக்கூடிய ஒரு பெரிய ஆலமரம் அகற்றப்பட்டு செல்வதற்காக மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது.பழமையான வழிபாட்டுத்தலமான இது 50 ஆண்டுகளுக்கு முன்புதான் காே விலாக உருப்பெற்றது.இவ்வாலயத்தின் அருகிலுள்ள பெருமாள் காேவில் சிவலிங்கத்தின் மேல்பகுதியிலுள்ள கல் பாேன்ற பகுதி பெருமாள் என்று காலங்காலமாக வழிபடப்படுவது சிறப்புக்குரியது.

பாறைக் காேவில் முருகன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாறைக்_கோவில்&oldid=3074043" இலிருந்து மீள்விக்கப்பட்டது