பினய் குமார் சர்க்கார்

பினய் குமார் சர்க்கார் (Benoy Kumar Sarkar) (1887 -1949) என்பவர் இந்திய சமூகவியல் அறிஞர் பேராசிரியர் மற்றும் தேசியவாதி ஆவார். பெங்கால் சமூகவியல் நிறுவனம், பெங்காலி ஆசிய அகாதமி, பெங்காலி தாண்டே சொசைட்டி, பெங்காலி அமெரிக்க கலாசார நிறுவனம் போன்ற அமைப்புகளை நிறுவியவர் . நாசிசம் என்ற கொள்கையை இவர் ஆதரித்தார். மேலும் பாசிச எதேச்சதிக்காரம் இந்தியாவில் உருவாக வேண்டும் என விரும்பினார். [1]

பினய் குமார் சர்க்கார்

கல்வி மற்றும் பதவி தொகு

1905இல் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் படித்து ஆங்கிலத்திலும் வரலாற்றிலும் பட்டங்கள் பெற்றார். முதுவர் பட்டமும் பெற்றார் 1925 இல் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறை விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கினார். ஐக்கிய அமெரிக்காவில் பயணம் செய்தபோது அங்கு காலமானார். பல்வேறு தலைப்புகளில் பல நூல்கள் எழுதினார்.

மேற்கோள் தொகு

  1. Manjapra, Kris (2014), Age of Entanglement, Harvard University Press, p. 209
"https://ta.wikipedia.org/w/index.php?title=பினய்_குமார்_சர்க்கார்&oldid=2693223" இலிருந்து மீள்விக்கப்பட்டது