பிரித்தானியத் தமிழர் பேரவை

பிரித்தானியத் தமிழர் பேரவை என்பது பல்வேறு பிரித்தானியா தமிழர் அமைப்புகளின் ஒரு குடை அமைப்பு ஆகும். ஈழப் போராட்டத்தை முன்னெடுப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதும் இவர்களின் நோக்கம் ஆகும். ஊடக, அரசியல், பொருளாதார, குடிமக்கள் தளங்களில் முனைப்பாக இவர்கள் செயற்படுகிறார்கள். குறிப்பாக பிரித்தானியா அரசியல்வாதிகள் இலங்கை இன அழிப்பு எதிராகக் குரல் கொடுக்க இவர்கள் உந்திவருகிறார்கள். சனவர் 31, 2009 இல் இந்த அமைப்பு ஒழுங்கமைத்த பேரணியில் 50 000 மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

வெளி இணைப்புகள் தொகு