புதுவை மலர் (சிற்றிதழ்)
புதுவை மலர் இலங்கை கொழும்பிலிருந்து 1972ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
ஆசிரியர் தொகு
- ஐ. ஏ. சமத்
உள்ளடக்கம் தொகு
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது. கவிதைகள், கட்டுரைகள், கதைகள், ஆய்வுக் கட்டுரைகள், இஸ்லாமிய கொள்கை விளக்கக் கட்டுரைகள், வினாவிடைகள், வாசகர் பக்கம், இஸ்லாமிய உலக செய்தி ஆய்வுகள் என்பன இதில் உள்வாங்கப்பட்டிருந்தன.
ஆதாரம் தொகு
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்